திருச்சி மாநகரில் 4 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவு பிறப்பித்தார். இதில் திருச்சி கோட்டை சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வளராக பணியாற்றி வந்த சிவராமன், காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும், அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் வினோதினி திருச்சி மாநகர குற்றப்பிரிவு எண்-1 க்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் திருச்சி மாநகர குற்றப்பிரிவுக்கு எண் 1-ல் பணியாற்றிய காவல் ஆய்வாளர் பெரியசாமி கோட்டை சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments