Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சேவையாற்றிய திருநங்கைகளுக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமூகத்தில் எதிர்ப்புகளை மீறி தங்களது சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கவுரவிக்கும் வகையிலும், மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது ரூ. ஒரு லட்சம் காசோலை மற்றும் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.

திருநங்கையர் தினமான ஏப். 15ல் வழங்கப் படும் இவ்விருது பெற, அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய, குறைந்தது 5 திருநங்கைகள் முன்னேற உதவிய வாரியத்தில் உறுப்பினராக இல்லாத திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணத்துப்பத்துடன், பயோ டேட்டா, பாஸ்போர்ட் போட்டோ 2, ஆட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலரின் பரிந்துரை கடிதம்,

ஏற்கனவே பெற்ற விருதுகளின் விபரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்) சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு தமிழில் தயார் செய்து தலா 2 நகல்கள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் பிப். 10ம் தேதி கூடுதல் விபரங்களுக்கு 0431- 2413796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *