Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம்  அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உடுப்பி பீடாதிபதிக்கு (மங்களாசாசனம்) மரியாதை.

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் அகோபில மடம்,உடுப்பி மடம், ஆண்டவன் ஆசிரமம் மற்றும் சிருங்கேரி உள்ளிட்ட  5 மடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் கோவில் சார்பில் மரியாதை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி  ஸ்ரீரங்கம்  அரங்கநாதசுவாமி திருக்கோயில் தங்க கொடிமரம் முன்பு உடுப்பி ஸ்ரீவாதிராஜ மடத்தின் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீவிஷ்வவல்லப தீர்த்த சுவாமிகள் மங்களாசாசனம் மரியாதை வழங்கப்பட்டது.

மங்களாசாசனம் மரியாதை என்பது (மூலவர் சன்னதி) பெரியசன்னதியில் உள்ள பெருமாளுக்கு முன்னதாக தான் அனைவருக்கும் சடாரி மரியாதை என்பது வழங்கப்படும். ஆனால் மடாதிபதி, பீடாதிபதி சன்னியாசிகளுக்கு தங்க கொடிமரம் முன்பாகவே சடாரி வைத்து அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு மூலதனத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு பெருமாளுக்கு சாற்றப்பட்ட வஸ்திரம் சாற்றி  சாமி தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த முறை மீண்டும் அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மேளம் மற்றும் மாலை மரியாதையுடன்  யானை குதிரையுடன் உடுப்பி பீடாதிபதி அழைத்துவரப்பட்டு ஸ்ரீரங்கம் ரங்கா கோபுரமும் கோவில் நிர்வாகம் சார்பில்  பட்டாச்சாரியர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கருடாழ்வார், மூலவர், தாயார் மற்றும் தேசிகர் சன்னதிகளில் உடுப்பி பீடாதிபதி சுவாமிகள் தரிசனம் (மங்களாசாசனம்) செய்தார். கோவிலில் அவருக்கு வழங்கவேண்டிய தீர்த்தம், சடாரி, அபயஹஷ்தம், தொங்கு பரிவட்டம் உள்ளிட்ட மரியாதைகள் சிறப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கோவில் அர்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *