Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை – கணக்கில் வராத ரூ.58 ஆயிரம் பறிமுதல்

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்ட அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 8 போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயணாளிகளுக்கு வீடு ஓதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் வந்ததையெடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் உதவி நிர்வாக பொறியாளர் முருகானந்தம் மற்றும் வீடு ஒதுக்கீடு அதிகாரியான கற்பகவிநாயகம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் உதவி நிர்வாக பொறியாளர் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.58 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சோதனை மேற்கொண்டு அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *