திருச்சி அருகே உள்ள பழூர் காந்திநகரை சேர்ந்த திராவிடமணி என்பவரை ஜீயபுரம் டி.எஸ்.பி பாலச்சந்தரின் தனிப்படை போலீசார் 66 மது பாட்டில்களுடன் கடந்த 26ம் தேதி காலை 11.30 மணியளவில் பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்று மாலை 4:30 மணியளவில் திருச்சி 3வது ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது புதிய அமென்மெண்ட் முறையில் மாற்றி வழக்கு பதிவு செய்து கைதியை கொண்டு வருமாறு நீதிபதி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து திராவிட மணியை அழைத்து சென்ற ஜீயபுரம் போலீசார் 27ம் தேதி வரை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் கஸ்டடியில் வைத்துள்ளனர். பின்னர் 27ஆம் தேதி மதியம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு திராவிட மணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிட மணிக்கு 28ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறை மருத்துவரால் முதலுதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் திராவிட மணியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments