Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மத்திய சிறையில் அலுவலக மேலாளர் இயற்கை எய்தினார்.

திருச்சி மத்திய சிறையில் அலுவலக மேலாளராக பணிபுரிந்து வந்தவர் திருமுருகன் (49). இவர் பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சிறையில் சமூக அக்கறை சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்ய அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி பத்திரிக்கை ஊடகம் வாயிலாக சேவை புரிந்தவர். இந்த நிலையில் இன்று காலை மத்திய சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு செல்லும் வழியிலேயே திருமுருகன் மரணம் அடைந்தார். அவரது உடல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திருமுருகனுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *