Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த திருச்சி மாநகராட்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதித்த விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்தார்கள்.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள் லெமன் சாதம், புளி சாதம், 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்கள் ஆகியவற்றை புயலால் பாதிக்கப்பட்ட பபொதமக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

(01.12.2024) அன்று நிவாரண பொருட்கள் மற்றும் மாநகராட்சியின் இரண்டு இளநிலை பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணி மேற்கொள்வதற்காக 150 தூய்மை பணியாளர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள், 10 தூய்மைப்பணி மேட்பாளையாளர்கள், மழை நீர் உறிஞ்சுவதற்கான 10 எச்பி மோட்டார்கள் கொண்டு மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு மிகச் சிறப்பாக பணியை செய்து கொண்டு வருகிறார்கள்.

அதேபோல இளநிலை உதவியாளர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றி சிறப்பாக பணியை மேற்கொண்டு வருகிறார்கள். நிவாரணப் பொருள் வெளிய அனுப்பும் நிகழ்ச்சியின் போது மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் துணை ஆணையர், மண்டல உதவி ஆணையர்கள், உதவி செய்ய பொறியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *