Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர் கழகத்தின் காவல் தெய்வம் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் நல்லாசியுடன் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆவின் பெருந்தலைவர் C.கார்த்திகேயன் Ex.Mc., அவர்களின் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் மலைக்கோட்டை V.அய்யப்பன் அவர்களின் தலைமையில், பாலக்கரை பகுதி கழக செயலாளர் வெல்லமண்டி G.சண்முகம் அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பாலக்கரை பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்இன்று கன்டோன்மெண்ட்லி நடைப்பெற்றது.T.ரத்தினவேல், Ex., MLA.,சிறப்புரையாற்றினார்‌.

தீர்மானங்கள், காலத்தின் கட்டாயம் கழகத்திற்கு ஒற்றை தலைமை தேவை, எடப்பாடியார் பொதுச்செயலாளராகி கழகத்தை வழிநடத்த வேண்டும். வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் என்று ஒருமனதாக இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 2. கழகத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு ஸ்டாலின் அரசு துணை போகிறது.மிரட்டிப் பணிய வைக்கும் தி.மு.க அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *