திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா பெரும் தொற்றின் காரணமாக கிருஸ்தவ சபையின் உறுப்பினர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினர்கள் திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சபியுல்லாவை தொடர்பு கொண்டு உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
நேற்று இரவு இறந்தவரின் உடலை பெற்று உலக சுகாதார அமைப்பு WHO வழிகாட்டுதல் அடிப்படையில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கண்ணியமான முறையில் திருச்சி – திண்டுக்கல் ரோட்டில் உள்ள வண்ணாங் கோவில் கல்லறையில் கிருஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.
பின்னர் குடும்பத்தினருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினார்கள். நல்லடக்கம் செய்ய உதவிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் தன்னார்வலர்களுக்கு உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments