Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த திருச்சி பெண் மருத்துவர் தற்கொலை

திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை ரோடு பகுதியை சேர்ந்த மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பெண் மருத்துவர் சஞ்ஜினி (30). இவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த நிலையில், சுப்பிரமணியபுரம் பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு துறையூரை சேர்ந்த மருத்துவர் கோகுல் என்பவருடன் திருமணம் ஆகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சஞ்ஜினி கணவரை விட்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பிரிந்து விவாகரத்து பெறுவதற்கு தனியாக வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரின் ஒரு வயது மகனுக்கு நேற்று காது குத்து விழா நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவர் சஞ்ஜினி இரவு தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காது குத்து விழாவிற்கு வந்த உறவினர்கள் அனைவரும் கணவர் எங்கே என்று சஞ்ஜினியிடம் கேட்டதால் மன உளைச்சலின் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *