திருச்சி மாநகர் மாவட்டம், ஜங்ஷன் பகுதி, தீரன் சின்னமலை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள, சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்களின் 269 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
அப்போது, நாம் எல்லோரும் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் என்று தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில் சபதம் ஏற்றோம். இந்நிகழ்வில், கழக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை
தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு டி.டி.சி சேரன், கொங்குநாடு மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சேகர், கழக மாநில இளைஞரணி செயலாளர் ப.த. ஆசைத்தம்பி, ஜங்ஷன் செல்லதுரை, உறையூர் ஆசிரியர் முருகன், ஸ்ரீரங்கம் சி.ராமமூர்த்தி, தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம், வையம்பட்டி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments