Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

400 மீட்டர் ஓட்டத்தில் திருச்சி தேசிய கல்லூரி மாணவி வெற்றி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி சென்னையில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி 25-ந் தேதி வரை 17 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் தடகளபிரிவில் திருச்சி தேசியக்கல்லூரி முதுநிலை ஆங்கிலம் முதலாமாண்டு மாணவி அக்சயாஸ்ரீ 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாணவி அக்ஷயாஸ்ரீ ஏற்கனவே பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தின் சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

மாணவிக்கு தேசிய கல்லூரி செயலாளர் ரகுநாதன், முதல்வர் குமார், துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *