Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி தனியார் பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது:

தஞ்சை மாவட்டம் மேகளத்தூரில் இருந்து மாரனேரி, இந்தலூர், கிள்ளியூர், பத்தாளப்பேட்டை வழியாக திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி பேருந்து திருவெறும்பூர் அருகே உள்ள செட்டியார் பேட்டை அருகே வரும் போது ரோட்டின் ஓரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தனியார் (செல்லம்மாள் மெட்ரிக்குலேசன்) மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். ஒரு மாணவனின் நிலை மோசமான நிலையில் உள்ளது.
விபத்தில் காயமடைந்த 6 பேரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்து ஊரில் இருக்கும் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விபத்தில் தங்களது பிள்ளைகளும் காயமடைந்தவர்களில் இருப்பார்களோ என பெற்றோர்களும் தங்களது ஊரை சேர்ந்தவர்களாக இருப்பார்களோ என பொதுமக்களும் அந்த பகுதியில் குவிய தொடங்கியதால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Advertisement

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விபத்தை நேரில் பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த மேகளத்துரை சேர்ந்த தினகர் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *