Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

40 சவரன் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசுக்கு பாராட்டு

தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சென்ற ரயிலில் பயணம் செய்த பயணிகள் இருவர் தங்களின் பேக் ஒரே மாதிரி இருந்துள்ளது. பட்டுக்கோட்டைக்கு செல்பவர் திருநெல்வேலி செல்லும் பயணியின் பேக்குடன் இறங்கிவிட்டார். திருநெல்வேலிக்கு சென்று இறங்கியவர் தன்னுடைய பேக் மாறியதை அறிந்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததார்.

முன்பதிவு பட்டியலை எடுத்து அருகில் பயணம் செய்தவர் எங்கே இறங்கி உள்ளார் என்பதை கண்டறிந்து அவர்களுடைய தொலைபேசி எண்ணிற்கு அழைத்து அவர்களை திருச்சி இருப்புபாதை காவல் நிலையத்திற்கு வர சொல்லி அழைப்பு விடுத்தனர்.

அதன் பிறகு இருவருடைய பேக்கையும் வைத்து சரி பார்த்து உரியவரிடம் 40 சவரன் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20 லட்ச ரூபாய் என ரயில்வே இருப்பு பாதை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.திருச்சி இருப்பு பாதை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நகைகளை மீட்டு உரியரிடம் ஒப்படைத்ததற்கு  உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *