Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ரயில்வே பாதுகாப்பு அணி முதலிடம்

RPF பயிற்சி மையம் திருச்சியில் (01.08.2024) முதல் (03.08.2022) வரை, RPF மண்டலங்களுக்கு இடையிலான நாசவேலை எதிர்ப்பு சோதனை மற்றும் அறிவியல் புலனாய்வுப் போட்டிக்கள் -2024 நடத்தப்பட்டது.

தெற்கு ரயில்வேயில் இருந்து TPJ (திருச்சிராப்பள்ளி), MDU (மதுரை), TVC (திருவனந்தபுரம்), SA (சேலம்), MAS (சென்னை) ஆகிய 05 RPF மண்டலங்கள் அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. போட்டியின் நிறைவு விழா (03.08.2024) அன்று 16:30 மணிக்கு மண்டல RPF பயிற்சி மையம்/திருச்சியில் நடத்தப்பட்டது.

இதில் டாக்டர்.அபிஷேக், IRPFS, Sr.DSC/TPJ விழாவின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் உதவி ஆய்வாளர் s .சரவணன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு, தலைமையிலான திருச்சி ரயில்வே பாதுகாப்பு அணி இரண்டு போட்டியிலும் ஒட்டுமொத்த முதல் பரிசை பெற்றது. இரண்டாவது இடத்தை சேலம் மற்றும் திருவனந்தபுரம் அணிகள் பெற்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *