Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

E.D அதிகாரிகளை அதிர வைத்த திருச்சி மணல் குவாரி – 26 கவுண்டிங் மிஷின் – ஒரு நாளில் 10 கோடி வசூல் – 3 அதிகாரிக்கு சிக்கல்

திருச்சி திருவானைக்காவல் மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. காலை 9 மணிக்கு துவங்கிய சோதனை இரவு 7க்கு நிறைவடைந்தது. தினமும் காலை 11 மணிக்குள் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் இந்த மணல் குவாரியில் பணம் வசூல் ஆகிறது.

இதனை கண்டெய்னர் அறையில் பணம் எண்ணுவதற்காக 28 இயந்திரம் உள்ளே வைக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்தது. அரசு நிர்ணயித்தது மூன்று யூனிட்டிற்கு 624 ரூபாய் மணல் விலையாம். யாருக்கும் நேரடியாக குவாரியில் மணல் கொடுக்கப்படுவதில்லை ஆன்லைன் மூலமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இங்கே அமலாக்கத்துறை சோதனையில் டோக்கன் கொடுப்பதற்கு ஒரு ஏஜென்ட் அதற்கு கமிஷன் என்ற தகவல் விசாரணையில் வந்துள்ளது.

மேலும் இவர்கள் கொடுக்கும் எட்டாயிரம் ரூபாய்க்கு மணல், 16 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள மணல் இந்த யூனிட்டிகளின் அளவு இதற்கான தொகை எதுவும் நீர்வளத்துறை அதிகாரிகளோ, கனிம வளத்துறை அதிகாரிகளோ யாரும் கணக்கிடுவதில்லை. ஒரு தனிநபர் நேரடியாக ஆயிரக்கணக்கான லாரிகளை வைத்து அரசு பர்மிட் இல்லாமலேயே மணல் அள்ளுவது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நாள் ஒன்றுக்கு இந்த குவாரியில் 10 கோடி ரூபாய் வரை வசூல் என அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், தங்களது காரில் எடுத்துச் சென்றனர். மேலும் மணல் சேமிப்பு கிடங்கிற்கு வந்த நீர்வள ஆதாரத்துறை இளநிலை பொறியாளர் ஆறுமுகத்தை, உதவி பொறியாளர் சாதிக் பாஷா, உதவியாளர் சத்தியராஜ் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்கள். 10 மணி நேர விசாரணைக்கு பிறகு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் 3 பேரையும் அமலாக்கத்துறையினர் விசாரிக்க அழைத்துச் சென்றனர். இவர்களின் செல்போன் கைப்பற்றியதால் அனைத்து தகவலும் அமலாக்க துறையினர் பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *