Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தவறவிட்ட குழந்தையை பெற்றோரிடம் சேர்த்த கொள்ளிடம் போலீசாருக்கு திருச்சி எஸ்பி பாராட்டு

No image available

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சி நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள ஒய் ரோடு பேருந்து நிறுத்தத்தில் பெயர் விலாசம் தெரியாத இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஆதரவற்று இருந்துள்ளதை கண்ட டிக்கெட் பரிசோதகர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். 

Advertisement

விரைந்த வந்த போலீசார் குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் அழைத்து சென்றனர். இந்த குழந்தை குறித்து தகவல் தொிந்தவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து ஆதரவற்ற நிலையில் நின்ற குழந்தை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருவணைக்காவல் செக்போஸ்ட் அருகே உள்ள சரவணபுரம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி மோகன்ராஜ் – தனலெட்சுமி மகன் என்பது தெரியவந்தது.

மேலும் கூலி வேலைக்காக சென்னை செல்வதற்காக பேருந்திற்காக உறவினர்களோடு இருந்த மோகன்ராஜ் – தனலெட்சுமி தம்பதியினர் உறவினர் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். பின்னர் குழந்தை விளையாடுவதற்காக கீழே இறங்கி விடப்பட்ட நிலையில் நீண்ட நேரம் கழித்து பேருந்து வந்ததும் குழந்தையை மறந்துவிட்டு அவசரத்தில் பேருந்தில் ஏறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செங்கல்பட்டில் உணவகத்தில் பேருந்து நின்ற பின்னர் பெற்றோர்கள் குழந்தையை தேடியுள்ளனர். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் போலீஸ் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையின் உறவினர் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தையை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

மேற்கண்ட விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய No 1 டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலைய 

பெண் உதவி ஆய்வாளர் மேகலா ,சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர் சாந்தா, தனிப்பிரிவு காவலர் சுரேஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நேரில் அழைத்து கேடயம் வழங்கி வாழ்த்தி‌ பாராட்டினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *