Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

லஞ்ச புகாரில் தாட்கோ உதவியாளருக்கு 5 வருட சிறை திருச்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 2007 ஆம் ஆண்டு அரசு மூலம் புதிய ஆட்டோ வாங்குவதற்கு தாட்கோ நிறுவனத்தின் மூலம் வங்கி கடன் பெற்றுள்ளார். தான் வாங்கிய ஆட்டோ கடனுக்கு 25,000 மானியம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மணிகண்டனுக்கு மானிய தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற்று தருவதற்காக மூவாயிரம் ரூபாய் லஞ்சமாக தாட்கோ அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பாலு கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி  அம்பிகாபதி  புகார் அளித்ததின் பேரில் டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கையும் களவுமாக கைது செய்தனர். மேற்படி வழக்கினை தற்போதைய டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் மற்றும் அரசு வழக்கறிஞர்  ஜோதிமணி  மூலம் வாதாடப்பட்டது.

திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு முடிவு பெற்றது.  இதில்  இளநிலை உதவியாளர் பாலுவின் மீதான குற்றம் நிரூபணம் ஆணதால் அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

பின் மேற்படி இளநிலை உதவியாளர் பாலுவை நீதிபதியின் உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *