Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோயில்களில் (28.10.2023) சனிக்கிழமை தரிசனம் கிடையாது

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோயில் இணை ஆணையர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்….. திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது.

வருகின்ற (28.10.2023) சனிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் பிற்பகல் 03:00 மணிக்கு விளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து மாலை 05.00 மணிக்கு சாயராட்சை பூஜையும் முடித்து மாலை 06:00 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் (29.10.2023) ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் 05:30 மணிக்கு நடை திறக்கப்படும்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற (28.10.2023) சனிக்கிழமை அன்று சந்திர கிரஹணம் நிகழ உள்ளதால், அன்றைய தினம் மாலை 5:30 மணிக்குபிறகு அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் இல்லை. மறுநாள் (29.10.2023) ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 06:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *