Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் மக்கள் நீராடுவது வழக்கம்.
இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக இது குறித்து, தீயணைப்புத் துறையினருக்கும்  தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த  தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிந்தவரின் உடலை மீட்டனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார்  இறந்தவரின்  உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார் என்பது அடையாளம் தெரியாத நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *