Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விஷன் செய்தி எதிரொலி – சரி செய்யப்பட்ட சாலை

திருச்சி மாநகராட்சியில் வார்டு 33,(துணை மேயர் திவ்யா தனக்கொடி வார்டு, செக்கடித் தெரு) இந்த வார்டில் தண்ணீர் குழாய் பதிக்கும் பணி முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. தெருவில் தோண்டிய பள்ளங்கள் சரியாக மூடாமல் இருந்தது.

இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை. முதியவர்களும், குழந்தைகளும் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்து செல்லும் போது பெரும் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் முதியவர்கள் மருத்துவமனை செல்ல ஒரு ஆட்டோ கூட உள்ளே வர முடியாத சூழ்நிலையில் தெரு சாலை மோசமான இருந்தது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகைப்பட ஆதாரத்துடன் திருச்சி விஷனுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர் இது பற்றி கடந்த மாதம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருச்சி விஷனில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக செக்கடித் தெருவில் தற்காலிகமாக தெருவாசிகள் பயன்பெறும் வகையில் சாலை செப்பனிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கும், திருச்சி விஷன் இணைய வழி ஊடகத்திற்கு தெருவாசிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *