Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாலை தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். நாமக்கல்லில் இருந்து அரியலூர் நோக்கி பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது லாரி துறையூர் முசிறி பிரிவு சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சரவணன் தூக்கத்தில் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் தனியாக விழுந்தன. இந்த விபத்தில் ஓட்டுநர் சரவணன் காயம் இன்றி உயிர் தப்பினார். விபத்து நடந்தது விடியற்காலை நேரம் என்பதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *