திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இந்த 65 வார்டுகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரித்து மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவரங்கம் மண்டலம் – 1க்குட்பட்ட 4-வது வார்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4900 வீடுகளுக்கு ஸ்ரீரங்கம் மண்டல குழு தலைவர் ஆண்டாள் ராம்குமார், ஏற்பாட்டில் இரு வண்ண குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் மரு.இரா. வைத்தியநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு இரு வண்ண குப்பைத் தொட்டிகளை வழங்கினர். மேலும்,4900 வீடுகளுக்கு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வழங்கப்படும். இந்நிகழ்வில் மண்டலக்குழு தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments