Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

உள்ளாடையில் கடத்தி வந்த தங்கம் – உருக்கி எடுத்த புலனாய்வு பிரிவினர்!!

சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுக்கா, ஆலத்தூரைச் சேர்ந்த கௌதம் 25 என்ற பயணி தனது உள்ளாடையில் பேஸ்டுடன் கலந்து 1150 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தார். அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பேஸ்டிவிருத்து தங்கத்தை உருக்கி பிரித்து எடுத்தனர்.

Advertisement

அப்போது அவர் கொண்டுவந்த பேஸ்ட் வடிவிலான தங்கத்தை பிரித்து எடுத்த போது 909 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 45.78 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *