Monday, September 22, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

இந்திய இராணுவத்தால் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக ஜனவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க (02.01.2004) முதல் (02.07.2007) வரையிலான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித் தகுதி 12-ம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது மூன்று ஆண்டுகள் டிப்ளமோ இன்ஜினியரிங் 50 சதவீதம் தேர்ச்சி பெற்று முடித்தவராக இருத்தல் வேண்டும். ஆண்கள் குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ, மார்பு விரியாத நிலையில் 77 செ.மீ, விரிந்த நிலையில் 82 செ.மீ. இருத்தல் வேண்டும். உயரம் மற்றும் வயதிற்கு ஏற்றவாறு எடை இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்ச உயரம் 152 செ.மீ. இருத்தல் வேண்டும். உயரம் மற்றும் வயதிற்கு ஏற்றவாறு எடை இருக்க வேண்டும்.

மேலும் இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in  என்ற இணையதளம் முலம் அறிந்து கொண்டு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூபாய் 30,000ற்குள் ஊதியமும் நான்கு ஆண்டு பயிற்சி கால முடிவில் பட்டப்படிப்பிற்கு இணையான திறன் சான்றிதழும், ரூபாய் 10 லட்சம் வரை அக்னிவீர் நிதியும் வழங்கப்படும். இது தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *