திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறும் வகையில் தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தலைமையில், ஆணையர் வே.சரவணன் முன்னிலையில் உறுதிமொழியை படிக்க அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர். முன்னதாக இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் நகர பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் கே.எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments