Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

சுகாதாரத்துறையில் காலி பணியிடங்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரத்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அறிவித்துள்ளார்.

இந்தப்பணிகள் முற்றிலும் தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தத்திற்கான பணியிடங்களாகும். இப்பணியிடங்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிரப்பப்படவுள்ளன.

ஆலோசகர்/உளவியலாளர்-1 (Counsellor/Psychologist M.A. or M.Sc., in Psychology) ஒப்பந்த பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.23,000- மனநல சமூக சேவகர்- 1 (Psychiatric Social Worker M.A.Social Work (Medial/Psychiatry) பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.23,800- மற்றும் செவிலியர்-1 (Staff Nurse – B.Sc., / Diploma Nursing) பணியிடத்திற்கான மாத வாதியம் ரூ.18,000- இப்பணியிடங்களுக்கான அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். 

இதற்கான விண்ணப்பங்கள் https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர். அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரிக்கு (31.08.2024)-க்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ அனுப்பவேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *