Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மாராடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் சுமதி. இவரிடம் துறையூர் அடுத்த மாராடி கிராமத்தில் வசிக்கும் சத்யா என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக சத்யாவிடம் கிராம நிர்வாக அலுவலர் 10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்யா லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா கொடுக்க 10 ஆயிரம் கேட்டு 7 ஆயிரம் ரூபாயை கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ- வை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *