Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது – திருச்சியில் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு

திருச்சியில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் சிவபதியின் இல்ல திருமண விழாவிற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏர்போர்ட் பகுதியில் நடந்த வரவேற்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில் தமிழகத்தில் தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்து 15 மாதங்களில், எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு தான் தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்கள். நாம் ஆரம்பித்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அ.தி.மு.க  ஆட்சியில் தொடங்கப்பட்ட இன்னும் பல திட்டங்கள் முடங்கி இருக்கிறது. அவற்றை விரைவாக முடிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அ.தி.மு.க., அரசின் திட்டங்களை தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்ததாக பேசுகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஆன்லைன் ரம்மி மட்டும் தான் கொண்டு வந்தீர்கள். அதன் மூலம் பணம் யாருக்கு செல்ல வேண்டுமோ அவர்களுக்கு சரியாக செல்கிறது. திமுக அரசு போட்டோ சூட்‌ மட்டுமே செய்கிறது. அதை தொலைக்காட்சியில் போடுகிறார்கள். நிதி இல்லாத போது ஏன் எழுதாத பேனா வைக்க வேண்டும். 80 கோடிக்கு போனா அவசியமா. இதை வைத்து 6 1/2 கோடி மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம். பேனா வையுங்கள் 1 கோடியில் வையுங்கள் வேணாம் என்று சொல்லவில்லை.

இந்த ஆட்சி வந்த பிறகு சொத்து வரி போனஸ், தண்ணீர் வரி, மின் வரி உயர்வு போன்றவை மக்களுக்கு போனஸ்கள் வழங்கியுள்ளனர். எந்த கொம்பனாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது. சிலர் வேண்டுமென்றே திமுகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக எதிர்க்கபார்க்கிறார்கள் அது ஒரு போதும் நடக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் நான் உங்களுடன் பயணிக்கிறேன். சிலர் 10 % பொதுக்குழு உறுப்பினர்கள்,11 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இருந்தார்கள் உங்கள் விருப்பப்படி சேர்த்தோம். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த போது எதிர்த்து வாக்களித்தார் தான் அவர். இவர் அம்மா விசுவாசி என்கிறார்.

நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் நான் தான் ஜெயலலிதாவிற்க்கு விசுவாசமாக இருந்தேன். அவர்‌ எதிர் தரப்பில் நின்றார். அவர் எப்படி விசுவாசி என்கிறார். அதிமுக தலைமை அலுவலத்தை உடைத்தவர் இவரை எப்படி இணைக்க முடியும். அவர் முன்னிலையில் இருந்து செய்கிறார். நான் கட்சியை உயர்வாக நினைக்கிறேன். அவர்கள் வியாபாரமாக நினைக்கிறார்கள். இவரை போல எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *