Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிறுமி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு- நீதிமன்ற மாடியில் இருந்து குதித்த குற்றவாளிகள்

திருச்சியில் கடந்த (16.08.2020)-ந் தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பெறப்பட்டது.

 பேரில் 1.பசுபதி, (27), த.பெ.ரமேஷ், 2.வரதராஜ் (29), த.பெ.ஆனந்த் மற்றும் 3.திருப்பதி, (29), த.பெ.திருவரங்கம் ஆகியமூவர் மீதும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் எதிரிகள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி எதிரிகள் 1. பசுபதி, 2.வரதராஜ், 3.திருப்பதி ஆகிய மூவர் மீது குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று (11.01.2024)-ம்தேதி, மேற்படி எதிரிகள் 1. பசுபதி, 2.வரதராஜ், 3.திருப்பதி மூவருக்கும் போக்சோ ச/பி 5(g), 5(1)

r/w 6- ன்படி 20 வருட சிறைத்தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், 450 இ.த.ச. பிரிவின்படி 5 வருட சிறைத்தண்டனையும், ரூ.4,000/- அபராதமும், மற்றும் 506(ii) இ.த.ச. பிரிவின்படி 1 வருட சிறை தண்டனையும், ரூ.1,000/- அபராதமும், விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5,00,000/- இழப்பீடுத்தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்புவழங்கினார்.

தண்டனை பெற்ற திருப்பதி மற்றும் பசுபதி திருச்சி மகிளா நீதிமன்றம் முதல் மாடியில் இருந்து குதித்தனர். தற்பொழுது திருச்சி அரசு மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நீதிபதி தண்டனை அறிவிக்கும் பொழுது இருவரும் மாடியில் இருந்து குதித்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *