Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முகக் கவசங்கள்!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 100% சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாகவும் நேர்மையாக வாக்கு செலுத்தவும் வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் பாதுகாப்பாக இருக்க முககவசம் அணிவதின் முக்கியதுவத்தை வலியுறுத்தும் விதமாகவும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான Sமார்ட்டின் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முககவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Advertisement

இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் & நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் தலைமை தாங்கினார்‌. வழக்கறிஞர் T.கார்த்திகா, சமூக ஆர்வலர் ஶ்ரீனிவாச பிரசாத் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம், S.பகவதி, தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்தியராக்கினி, மாற்றம் அமைப்பை சேர்ந்த எழில், ஏழுமலை தினேஷ்குமார்,அல்லிகொடி,ஆரோக்கிய ஆலிவர்,ராஜ் நிஷாந்த், வித்யாசாகர், விமல்குமார்,சரவணன்,கிருபா, பிரபு,மணி,யோகம்பாள்,ஹன்சிகா,சர்வேஸ்வரா, உமா,ராஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கினார்

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *