Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் சுவர் ஓவிய போட்டி -அசத்தல்

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மற்றும் பொன்மலை மண்டலங்களை சேர்ந்த சாரண சாரணியர்களுக்கு சுவர் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியானது காலை தொடங்கப்பட்டு  பிற்பகலில் நிறைவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டியை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் கோட்ட மூத்த இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார் தொழிலாளர் நல அதிகாரி சுவாமிநாதன் உள்ளிட்டவர்கள் இணைந்து தொடங்கி வைத்தனர். ஏழு வயதிற்கு உட்பட்டவர்களுக்கும்,  24 வயது வரை உள்ள  சாரண சாரணியர்களுக்கு இந்த போட்டி நடத்தப்பட்டது.

இது கிரீன், இந்தியாகிளீன் இந்தியா என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சாரண சாரணியர்களின் பயிற்சி மையத்தில் அமைந்துள்ள சுற்றுப்புற சுவர்களில் ஓவியங்கள் வரைய இந்த போட்டி நடைபெற்றது இதில் மொத்தம் 47 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கைவண்ணத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி கோட்ட சாரண சாரணியர்கள் படையின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *