Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கருத்து வேறுபாடுகளை சரி செய்வதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி.

அதிமுக தொழிற்சங்க திருச்சி மண்டல நிர்வாகிகளுக்கான விருப்ப மனு பெறுதல் நிகழ்ச்சி திருச்சி சின்ன மிளகு பாறை பகுதியில் உள்ள அம்மா மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறுகையில்….. அண்ணா தொழிற்சங்கத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப திருச்சி மண்டலத்தில் இருக்கக்கூடிய அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

அண்ணா தொழிற்சங்கத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்வது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அதிமுக கட்சியில் சிலருக்கு இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை சரி செய்வதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

ஒரு குடும்பத்தில் பிரச்சனைகள் எப்படி இருக்குமோ அது போன்று தான், அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம் இதற்கான நிரந்தர தீர்வை, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் காண்பார். 

வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவி ஏற்பார் என்றார். அதிமுக கட்சியின் அடுத்த கட்ட கள ஆய்வுகள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் கொரடா மனோகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.குமார், ரத்தினவேல், அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *