Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இராமானுஜர் கண்ட ஸ்ரீரங்கம் எங்கே?- ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூஜைகள், நிர்வாகங்கள் மரபு, பழமை மாறாமல் சுவாமி இராமானுஜர் ஆணைப்படி நடைபெற வேண்டும், ஸ்ரீரங்கம் திருக்கோவில் நடைமுறைகள் மரபுகள் பற்றி நன்கு அறிந்த உள்ளூர் வாசிகள் மட்டுமே அரங்காவலராக இடம்பெற வேண்டும்,

Advertisement

ஸ்ரீரங்கம் திருக்கோவில் நடை பெறும் அதிகபட்ச கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும்,ஸ்ரீரங்கத்தில் குடியிருப்போர் இன் அடிமனை பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்,உள்ளூர் பக்தர்கள் அரங்கனின் தரிசனம் செய்ய தனி வழி ஏற்படுத்தி தரவேண்டும்,

கோவிலின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரங்கன் பாதுகாப்பு பேரவையினர் சார்பில் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இராமானுஜர் கண்ட ஸ்ரீரங்கம் எங்கே என்ற பொருண்மையின் கீழ் கீழ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

புரோகிதர்கள், ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *