Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஆட்சியருக்கு முதல்வர் விருது வழங்கியது ஏன்?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் முதல்வரின் முகவரி துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள்
70833 .இதில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை
39029மனுக்கள்.55.1% தள்ளுபடி செய்யப்பட்டவை 23590 மனுக்கள். 33.3% நடவடிக்கையில் உள்ளவை
8214 மனுக்கள் 11.60%.ஏற்கப்பட்ட மனுக்களில் வழங்கப்பட்ட உதவிகள்/நடவடிக்கைகள்
மாதாந்திர உதவித்தொகை 5990 பேர்.
வீட்டுமனைப் பட்டாக்கள் 2110பேர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் உபகரணங்கள், மூன்று சக்கர வண்டிகள் , உதவித்தொகை,வேலை நாடுநர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான இலவச பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின்  திட்டங்களின் கீழ்  உதவிகள்  வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக தான் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு‌க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (12.3.2022) நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்வு நடவடிக்கையினை மாநில அளவில் சிறப்பாக மேற்கொண்டதற்காக விருதினை  வழங்கினார்கள்.  நீர்வளத் துறை அமைச்சர் 
துரைமுருகன் , நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு ஆகியோர் உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *