Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரோடு வசதி – லைட் வசதி -தண்ணி வசதி இல்ல எதுக்கு வந்தீங்க?- எம்எல்ஏ வை முற்றுகையிட்டு மக்கள் ஆவேசம்

முசிறி அருகே மேல வெள்ளூரில் முசிறி தொகுதி எம்எல்ஏவை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆவேசம். ஓட்டு கேட்டு வந்தீங்க இப்பதான் வர்றீங்க.ரோடு வசதி – லைட் வசதி -தண்ணி வசதி இல்ல எதுக்கு வந்தீங்க?பொதுமக்களின் சராமரி கேள்வியால் தினறிய ஆளுங்கட்சி எம்எல்ஏ.

திருச்சி மாவட்டம், முசிறி அருகேமேல வெள்ளூர் கிராமத்திற்குகிராமத் தார்சாலைஅமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் வருகை தந்தார்.பூமி பூஜை முடிந்த பிறகு அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 

முசிறிதொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனை முற்றுகையிட்டு சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதுஎங்கள் கிராமத்திற்கு தேர்தல் நேரத்தின் போது ஓட்டு கேட்டு வந்தீங்க .அதன் பிறகு இப்போதுதான் வர்றீங்க.ஓட்டு கேட்டு வந்தப்ப கிராம சாலையை போட்டு தருவதாக சொன்னீர்கள்.

இப்போதுதான் இங்கு வருகை புரிந்த உள்ளீர்கள்என ஆவேசமாக பேசினர்.எம் எல் ஏ இந்த ரோடு பூமி பூஜை போடத்தான் வந்துள்ளேன் எனக் கூறினார்.அப்போது பொதுமக்கள் எங்கள் ஊருக்கு செல்லும் வழியில் தெரு விளக்குகள் இல்லை,எங்கள் ஊரில் சுகாதார வளாகம் கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.அதற்கு தண்ணீர் வசதியும் மின்சார வசதியும் செய்து தரப்படாமல் கட்டி முடித்து இரண்டு வருடமாக திறக்கப்படாமல் உள்ளது.மேலும் எங்கள் ஊர் காவிரிக்கு அருகில் இருந்தும் சரிவர குடிதண்ணீர் வருவது இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி பேசினர்.

விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி எம் எல் ஏ காடுவெட்டி தியாகராஜன் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *