Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கணவனை கொலை செய்த காதல் மனைவி கைது

திருச்சி மாவட்டம் துறையூர் தேவாங்க நகர் பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை. இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பத்மினி என்ற பென்னை 30 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் இவர் லலிதா என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளார் .

முதல் மனைவி பத்மினி வீட்டின் முதல் தளத்திலும், இரண்டாவது மனைவி லலிதா கீழ் பகுதியிலும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அண்ணாதுரை தினமும் குடித்துவிட்டு மனைவி பத்மினி மற்றும் லலிதாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் வீட்டுக்கு வந்த அண்ணாதுரை மாடியில் இருந்த பத்மினியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரத்திரம் அடைந்த பத்மினி கயிற்றால் கணவனின் கழுத்தை இறுக்கி உள்ளார்.  பின்னர் மூச்சு தினறல் ஏற்பட்டு அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த துறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கொலை செய்த முதல் மனைவி பத்மினியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதல் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *