Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த பெண் கைது

உளவுத்துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையில், சுங்க இலக்காவை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவின் (AIU) திருச்சி அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.

அதில் பெண் பயணி ஒருவர் அணிந்திருந்த ஷார்ட்ஸ்க்குள் தைக்கப்பட்ட சிறப்பு பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவிலான (பேஸ்ட்) தங்கத்தை இரண்டு பாக்கெட்டுகளில் வைத்து கடத்திவந்தது தெரியவந்தது. 

அந்த ₹55.07 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 909.500 கிராம் எடையுள்ள 24K தூய்மையான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *