திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் ஆற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக இரவு ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தடவியல் நிபுணர்களுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் இறந்த பெண்ணுக்கு சுமார் 40 வயதில் இருந்து 45 வயது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உடலில் காயங்கள் இருந்தது. அருகில் ரத்தம் படிந்த கல் கிடந்தது. இதனால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவரை கொலை செய்த மர்ம நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று தெரியாமல் இருந்த நிலையில் பெண் இறந்து கிடந்த பகுதிக்கு அருகாமையில் சந்தேகப்படும் படியாக ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவருடைய பதில் தெளிவில்லாத காரணத்தினால் அவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எதற்காக அந்த பெண்ணை கொலை செய்யப்பட்டார்? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments