Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கை வசதி விரைவில் ஏற்படுத்த பணிகள் துவக்கம் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றால் பாதிக்கபடுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

பின்னர் தற்போது இருக்கக்கூடிய ஆக்சிஜன் அளவு மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கை நோயாளிகளின் சிகிச்சை முறை நோயாளிகளின் எண்ணிக்கை என பல்வேறு தகவல்களை திருச்சி தலைமை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதாவிடம் கேட்டறிந்தார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு… 834 நான்கு பேர் உள்நோயாளிகளாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் கலையரங்கம் மண்டபத்தில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 44 சாதாரண வசதிகளுடைய படுக்கை காலியாக உள்ளது என குறிப்பிட்டார். மேலும் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 

திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜன் வசதி செய்து தரப்படும் என்றும், தற்போதைக்கு ஆக்சிஜனக்கு எந்தவித தட்டுபாடும் ஏற்படவில்லை. இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு , மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்திரபாண்டியன், இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *