Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மணப்பாறை அருகே துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு – விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டியில் வசித்து வந்தவர் இருச்சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி பாலசுப்பிரமணி. இவர் வீட்டில் அருகே, தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீஸாருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து நள்ளிரவு நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் பாலசுப்பிரமணியை கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்டு உடற்கூராய்விற்காக திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலம் கிடந்த காட்டுப்பகுதியிலிருந்து உடைந்த நிலையில் நாட்டு துப்பாக்கி ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து பாலசுப்பிரமணி உயிரிழந்ததை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பாலசுப்பிரமணியின் தந்தை அழகர் (எ) ராஜாவிற்கு இரண்டு மனைவிகள் என்பதும், அதில் இளைய மனைவி அமுசவள்ளிக்கு கடைக்குட்டியாக பிறந்தவர் பாலசுப்பிரமணி என்பதும் தெரியவந்தது. மேலும் அவ்வப்போது அழகர் குடும்பத்தில் தகராறு செய்வதும் அதை பாலசுப்பிரமணி தட்டிக்கேட்பதும் வழக்கமாம். இந்த நிலையில் நேற்று இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், அழகருக்கும், பாலசுப்பிரமணிக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட போது, அங்கு தந்தை அழகர் தலைமறைவாகி இருப்பது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலசுப்பிரமணியன் தற்கொலையா செய்து கொண்டாரா? அல்லது தந்தை சுட்டு கொண்டாரா? என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *