Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், YWCA மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு இன்று (02.08.2023) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் கலந்து கொண்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கலந்துரையாடி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.சு.லெட்சுமி, திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நேரு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.சுப்பிரமணி, மாவட்ட திட்ட அலுவலர் (பொ) (ஒ.கு.வ.தி) மா.நித்யா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் வசந்தா, உஷாரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *