Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உலக வண்ணத்துப்பூச்சி தினம் – மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு போட்டி

உலக வண்ணத்துப்பூச்சி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பில் இன்று (14.03.2024) திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம வன உயிரினம் மற்றும் பூங்கா சரக்கத்திற்கு உட்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தலைமை வன பாதுகாவலர் N.சதீஷ் IFS ஆலோசனையின்படி மாவட்ட வன அலுவலர் S.கிருத்திகா, IFS., தலைமையில்,

R.சரவணகுமார் உதவி வன பாதுகாவலர் (mini zoo) முன்னிலையில், வனச்சரக அலுவலர் V. P.சுப்பிரமணியம் மற்றும் சரக பணியாளர்கள் மேற்பார்வையில், மாணவ, மாணவியர்களுக்கு வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் களி மண்ணால் ஆன மாதிரிகள், ஓவியப் போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் நடத்தப்பட்டது.

இதில் திருச்சி மேலூர் ஸ்ரீரங்கம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் போட்டிகளில் முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற பெற்றோர்கள் மாணவ, மாணவியர்களுக்கு பசுமைப் புரட்சி உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வன அலுவலர் வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பறவைகள் ஆர்வலர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *