Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உலக பட்டினி தினம் – த வெ க கட்சி சார்பில் அன்னதானம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடியில் தளபதியின் விலையில்லா விருந்தகம் சார்பில் 500 வது நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு த.வெ.க சார்பில் உணவளிக்கும் விழா நடைபெற்றது

விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அ ணி தலைவர் திருச்சி விக்னேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் பொருளாளர் பாரதி துணைத் தலைவர் ஹரிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் விலையில்லா விருந்தகத்தை த.வெ.க வின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் லால்குடி அருகே மேலவாளாடியில் திருச்சி தெற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக தினமும் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா விருந்தகத்தின் மூலம் உணவளித்து வருகின்றனர். 

இன்று 500 வது நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார்கள். இந்நிகழ்வில் துணைச் செயலாளர் சுரேந்தர், இணைச் செயலாளர்கள் ராஜேஷ், ஸ்டாலின் மாவட்ட நிர்வாகி புஷ்பராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *