Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

கண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய் நோட்டுகளின் எண்களை படித்துக்காட்டி உலக சாதனை – திருச்சி மாணவி அசத்தல்

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சரவணன் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீதா இவர்களது மகள் ரக்ஷிதா (7) துறையூரில் உள்ள விமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 

Advertisement

ரக்ஷிதா கண்ணை கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை படிப்பதில் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் 11 ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை படித்துக் காட்டி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் பெற்றுள்ளார். ஏற்கனவே தூத்துக்குடியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் ஒரு நிமிடத்தில் ஒன்பது ரூபாய் நோட்டுக்களை உள்ள எண்களை படித்துக் காண்பித்து தான் இதுவரை சாதனையாக இருந்தது.

ரக்ஷ்சிதா அந்த சாதனையை முறியடித்து ஒரு நிமிடத்தில் 11 ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை கண்ணைக் கட்டிக்கொண்டு படித்துக் காட்டி உலக சாதனை படைத்துள்ளார். நோபல் வேல் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சார்பாக வழங்கப்பட்ட சாதனைக்கான விருதினை ரக்ஷிதாவிற்கு முசிறி கல்வி மாவட்ட அதிகாரி சண்முகம் வழங்கினார். ரட்சிதா படிக்கும் விமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் விமலா பள்ளி முதல்வர் மரிய செல்வி முன்னிலையில் முசிறி கல்வி அதிகாரி சண்முகம் இந்த விருதினை ரக்ஷ்சிதாவுக்கு வழங்கினார்.

Advertisement

இதுபற்றி ரக்ஷ்சிதாவின் தாயார் கீதா கூறும்போது….. “ரக்ஷ்சிதாவின் திறமையை வெளிக் கொணர்வதற்காக பைடர் மைன்ஸ் என்ற சிறப்புப் பயிற்சியை அவருக்கு வழங்கியதாகவும் அதை கற்றுக்கொண்ட ரக்ஷிதா கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைவதிலும் வண்ணங்களை கண்டுபிடிப்பது ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை சொல்வதிலும் சிறப்பாக பயிற்சி பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளார்” எனக்கூறினார்

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *