Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஒளவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர், சர்வதேச மகளிர் தின விழாவின் போது சமூக சீரதிருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம்,

பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு ஒளவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாண்டிற்கான ஒவையார் விருது பெற தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://award.tn.gov.in) பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

2025 ஆம் ஆண்டு ஒளவையார் விருது பெற தகுதிகள் : 

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீரதிருத்தம். மகளிர் மேம்பாடு. மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை. அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.

பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விருது பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : (31.12.2024) என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *