Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் சிறுமியை சீரழித்த இளைஞர் கைது.

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். தாய் இறந்ததாலும், தந்தை கைவிட்டதாலும், பாட்டியுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தில்லைநகர் இபி அலுவலகம் அருகே காயத்துடன் நின்று கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார். அதுகுறித்து அவர் விசாரித்த போது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தவாறு பஸ்சில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதும், பின்னர் ஆள்நடமாட்டமில்லாத கொள்ளிடம் ஆறு ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் விடியும் வரை சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

சிறுமியை அழைத்து வந்த முதியவர், அவரது பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டுக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், சிறுமியை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான நபரை உடனடியாக பிடிக்குமாறு உத்தரவிட்ட காவல் ஆணையர் காமினி, அதற்காக தனிப்படை அமைத்தார். இதனை தொடர்ந்து குற்றவாளியை தேடி வந்த தனிப்படை போலீசார் சிதம்பரத்தில் தலைமறைவாய் இருந்த திருச்சி உய்யக்கொண்டான் திருமலை ஆதி நகரைச் சேர்ந்த சின்னராஜா (23) என்ற வாலிபரை பிடித்து என அப்போது போலீசாரிடம் தப்பி ஓடும் முயன்ற போது தடுமாறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *