Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கத்தில் பட்ட பகலில் இளைஞர் வெட்டி கொலை – பொதுமக்கள் அச்சம்

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் அன்பரசன் (32). இவர் பிரபல ரவுடி திலீப் என்பவரின் வலதுகரமாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் மீது அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் மேலூர் செல்லும் வழியில் உள்ள சாலை ரோட்டில் அன்பரசன் (எ) அன்பு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நான்கு பேர் அன்புவை ஓட ஓட விரட்டி விரட்டி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் உயிருக்கு போராடி அன்பை அவரது நண்பர்கள் உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் தற்பொழுது ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி வேடுபறி திருவிழா நடைபெற்றது. அப்பொழுது போஸ்டர் அடித்ததில் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

ஸ்ரீரங்கம் சாலை ரோட்டில் தெப்பக்குளம் தெரு அருகே பட்டப்பகலில் ஓட ஓட அன்பரசனை வெட்டி இருவர் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *